msvignesh

பரலோகத்திற்கு இயேசு ஒருவரே வழியா?

இந்த உலகத்தில் ஏத்தனையோ மக்கள் , எண்ணற்ற  தெய்வங்களை வணங்குவதன்    நோக்கமே  நித்திய ஜீவனை அடைவதற்குத்தான். ஆனாலும் அவர்கள்  எல்லோரும் உண்மையான வழியை கண்டைந்தாக தெரியவில்லை.நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலும் இப்படிப்பட்ட கேள்விகளோடு ஒரு கூட்ட மக்கள் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றனர்.அவர்கள் வேறுயாருமில்லை இயேசுவுடனே ஊழியம் செய்த இயேசுவின்  சீஷர்களே.    யோவான் 14:3 ,4 வசனத்தில் இயேசு தம்முடைய சீஷர்களைப் பார்த்து

“நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.”

இந்த வார்த்தைகளை கேட்ட தோமா  இயேசுவை  நோக்கி:

ஆண்டவரே நீங்கள் போகிற இடத்தை நாங்கள் அறியாமல் இருக்க? எப்படி  ஆண்டவரே வழியை அறிவோம் என்று கேட்டனர். அதற்கு இயேசு “

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”

என்று கூறினார்.

இயேசுவுடனே  கூட ஊழியம் செய்த  சீஷர்களே வழியை அறியாமலிருந்தார்கள்..ஆனாலும் இந்த வேதாகமத்தில் இன்றோரு மனிதனைக் குறித்து நாம் காணலாம்.

யோவான் 1:45

“பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.”

 

இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்று கூறினார்.அதற்கு  நாத்தான்வேல் எப்படி என்னை  அறிவீர் என்று கேட்டான்.அதற்கு இயேசு அத்தி மரத்தின் கீழ் உன்னைக் கண்டேன் என்று கூறினார். யூத கலாச்சாரத்தின் படி அத்திமரம் என்பதன் பொருள் வேதத்தைப் பற்றிய தியானம் என்று அர்த்தமாம். அத்திமரத்தின் கீழாக எத்தனாகிய யாக்கோபினைப் (இஸ்ரவேலன்) பற்றி நாத்தான்வேல் சிந்தித்துக் கொண்டிருந்ததை

இயேசு அறிந்து,நீ யாக்கோபினை போல எத்தன்யில்லை, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்று கூறியதுமே நாத்தான்வேல், தன்னைப் பற்றிய வெளிப்பாட்டினைக் குறித்து ஆச்சரியப்பட்டு

”நீர் தேவனுடைய குமாரன் என்று கூறினார்.

அதற்கு இயேசு அத்தி மரத்தின் கீழ் உன்னைக் கண்டேன் என்று கூறியதனாலே என்னை விசுவாசிக்கிறாய்.இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றுக் கூறினார்.பின்பு இயேசு

அவனை  நோக்கி

வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

 

ஆதியாகமம் 28:10 வசனத்தின் படி யாக்கோபு ஆரானூக்கு போகும் வழியில், சூரியன் அஸ்தமித்தப்படியால் இரவில் தங்கினான்.அப்போது நித்திரையில் ஒரு சொப்பனத்தைக கண்டான்.அதில் ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து  , தேவதூதர்கள் வானத்திற்கு ஏறுகிறதையும் இறங்குகிறதையும் கண்டான்.

ஆதியாகமத்திலேயே  வானத்திலிருந்து ,இந்த பூமிக்கு தேவதூதர்கள்

வருவதற்கு ஒரு ஏணியைப் பயன்படுத்தினர்கள்.இந்த  உலகத்தையும்

பரலோகத்தினையும் இணைப்பதற்கு ஒரு  ஏணிப் பயன்படுகின்றது.

இயேசு நானே அந்த  ஏணி என்று நாத்தான்வேலூக்கு தன்னை வெளிப்படுத்தினார். இன்று கிறிஸ்துவர்களாகிய நீங்களும்,நானும்

அந்த ஏணியைப் பற்றிக் கொண்டவர்களாக மட்டுமில்லாமல் தேவதூதர்களாப் போல்  பரலோகத்திற்கு  ஏறிப்போகிறவர்களாக

இருக்க வேண்டும்…….

 
Posted in Devotion on June 05 at 06:20 AM

Comments (0)

No login
gif