நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தார்
- என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே
- அருகில் வந்தாரே
மனது உருகினாரே
- இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே
- எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே
- காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே
- சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே
- மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே