Author

Aaruthalin theivame

ஆறுதலின் தெய்வமே

உம்முடைய திருச்சமூகம்

எவ்வளவு இன்பமானது

 

  1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி

ஆர்வமுடன் கதறுகின்றது

உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும்

கெம்பீரித்து சத்தமிடுது - ஆமென்

 

  1. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்

உண்மையிலே பாக்கியவான்கள்

தூய மனதுடன் துதிப்பார்கள்

துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமென்

 

  1. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்

உண்மையிலே பாக்கியவான்கள்

ஓடினாலும் களைப்படையார்

நடந்தாலும் சோர்வடையார் - ஆமென்

 

  1. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்

களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்

வல்லமை மேலே வல்லமை கொண்டு

சீயோனைக் காண்பார்கள் - ஆமென்

 

  1. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட

உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது

ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்

வாசலில் காத்திருப்பேன் - ஆமென்

Posted by Lyrics Manager on June 22 at 05:56 AM