Author

Nadanamaadi sthotharippen

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

நாதா நான் உம்மைத் துதிப்பேன்

கைத்தாள ஓசையுடன்

கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன்

அல்லேலூயா

 

  1. காண்பவரே காப்பவரே

கருணை உள்ளவரே

காலமெல்லாம் வழி நடத்தும்

கன்மலையே ஸ்தோத்திரம் -ஐயா

 

  1. வல்லவரே நல்லவரே

கிருபை உள்ளவரே

வரங்களெல்லாம் தருபவரே

வாழ்வது உமக்காக - ஐயா

 

  1. ஆண்டவரே உம்மைப்

பிரிந்து யாரிடத்தில் போவோம்

வாழ்வு தரும் வசனமெல்லாம்

உம்மிடம் தான் உண்டு - ஐயா

 

  1. அற்புதமே அதிசயமே

ஆலோசனைக் கர்த்தரே

அண்டி வந்தோம் ஆறுதலே

அடைக்கலமானவரே

Posted by Lyrics Manager on June 22 at 06:52 AM