Author

Album

Thanimaiyin paathayil Lyrics PPT தனிமையின் பாதையில்

தனிமையின் பாதையில்

தகப்பனே உம் தோளில்

சுமந்ததை நான் மறப்பேனோ

 

ஆ.. எத்தனை அன்பு என் மேல்

எத்தனை பாசம் என் மேல்

இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - தனிமையின்

 

  1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்

மார்போடு அணைத்துக் கொண்டீரே

கண்ணீரை கணக்கில் வைத்தீரே

ஆறுதல் எனக்கு தந்தீரே - ஆ

 

  1. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்

அடைக்கலம் எனக்கு தந்தீரே

தடுமாறும் வேலையிலெல்லாம்

தகப்பன் போல சுமந்து சென்றீரே - ஆ

 

  1. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்

என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே

உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே

இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - ஆ

Posted by Lyrics Manager on October 17 at 08:09 AM