Author

Thirukarathaal thaangi ennai Lyrics PPT திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே

திருக்கரத்தால் தாங்கி என்னை

திருச்சித்தம் போல் நடத்திடுமே

குயவன் கையில் களிமண் நான்

அனுதினமும் வனைந்திடுமே

 

  1. உம் வசனம் தியானிக்கையில்

இதயமதில் ஆறுதலே

காரிருளில் நடக்கையிலே

தீபமாக வழி நடத்தும்

 

  1. ஆழ்கடலில் அலைகளினால்

அசையும்போது என் படகில்

ஆத்ம நண்பர் இயேசு உண்டே

சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

 

  1. அவர் நமக்காய் ஜீவன் தந்து

அளித்தனரே பெரிய மீட்பு

கண்களினால் காண்கிறேனே

இன்பக் கானான் தேசமதை

 

Posted by Lyrics Manager on October 17 at 08:16 AM