துதியுங்கள் நம் தேவனை
போற்றுங்கள் நம் ராஜனை
வாழ்த்துங்கள் நம் கர்த்தனை
போற்றுவோம் வாழ்த்துவோம்
இன்றும் என்றென்றுமாய்
ஆ.. ஆ.. அல்லேலூயா
ஓ,. ஓ.. ஓசன்னா
அதிசயம் செய்யும் தேவன் பெரியவர்
நாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
நமக்காய் யாவும் செய்து முடித்தார்
நன்றியோடு ஆராதிப்போம்
நம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்
நம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர்
கண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்
கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம்
நமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்
நேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை
கரங்களை உயர்த்தி துதித்திடுவோம்