தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் - தூயாதி
- சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! - பாரில்
- பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே! - பாரில்
- துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! - பாரில்
- பரலோகில் இடமுன்று என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே! - பாரில்