இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
தீமைகள் அணுகாது
இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்
வியாதிகள் அணுகாது
என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
இயேசுவின் இரத்தம்
அவர் வார்த்தை என்னில்
இருப்பதினால் பயமேயில்லை
- பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு
நான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன்
- சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன்
விசுவாச கேடயத்தை பிடித்திடுவேன்
- சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன்
நீதி என்னும் மார்க்கவசம் தரித்திடுவேன்