Author

Ennai vittukodukkathavar Lyrics PPT என்னை விட்டுக்கொடுக்காதவர்

என்னை விட்டுக்கொடுக்காதவர்

என்னை நடத்துகின்றவர்

என்னை பாதுகாப்பவர்

என் நேசர் நீரே

 

நான் வழிமாறும்போது

என் பாதை காட்டினீர்

என்னால் முடியாதபோது

என்னை தூக்கி நடத்தினீர்

 

நான் பாவம் செய்தபோது

என்னை உணர்த்தி நடத்தினீர்

உம்மை நோகடித்த போதும்

உம் கிருபையால் மன்னித்தீர்

 

நான் தலைகுனிந்தபோது

என்னோடு கூடவந்தீர்

நான் குனிந்த இடத்திலே

எந்தன் தலையை உயர்த்தினீர்

 

நான் வேண்டிக்கொள்வதெல்லாம்

என் வாழ்வில் தருகின்றீர்

நான் நினைப்பதற்கும் மேலாய்

என்னை ஆசீர்வதிக்கின்றீர்

Posted by Lyrics Manager on February 18 at 07:23 AM