கைவிடாதிருப்பார்
என் வாழ்வின் பாதையிலே
கடின பாதையிலே உடன் இருந்து
எனக்கு உதவி செய்வார்
முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே
லீலி புஷ்பமாய் வைத்திடுவார்
முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல்
வாசனை வீச செய்வார்
அக்கினியில் நான் நடந்தாலும்
வெந்து போகாமல் பாதுகாப்பார்
பொன்னை போல என்னை
புடமிட்டு பொன்னாக ஜொலிக்க செய்வார்