Author

Siluvai nizhalathile Lyrics PPT சிலுவை நிழலதிலே காண்பேன் இளைப்பாறுதல்

சிலுவை நிழலதிலே

காண்பேன் இளைப்பாறுதல்

வானத்திலும் பூவிலும்

இயேசு நாமம் அடைக்கலமே (2)

சிலுவை நிழலதிலே

 

1.மான்கள் நீரோடைகளை

தினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2

கர்த்தாவே என் உள்ளமும்

உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2

 

2.உலகோர் பகைத்திட்டாலும்

என்னை உற்றார் வெறுத்திட்டாலும்-2

நிந்தைகள் சுமந்திட

எனக்கென்றும் கிருபை தாரும்-2

 

3.வியாதி படுக்கையிலும்

மனம் வாடித்தவிக்கையிலும்-2

கர்த்தாவே உம் கிருபை

என்னை நித்தமும் தாங்கிடுமே-2

 

4.எப்போ நீர் வந்திடுவீர்

எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்-2

மண்ணில் பரதேசி நான்

வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும்-2

 

Posted by Lyrics Manager on February 18 at 07:37 AM