Author

Thirumbi paarkiren vandha paathaiyai Lyrics PPT திரும்பி பார்கிறேன் வந்த பாதையை கண்ணீரோடு

திரும்பி பார்கிறேன் வந்த பாதையை

கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் - 2

 

நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்

தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் - 2

திருப்பி தர ஒன்றும் இல்லையே

 

1.மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே

மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே - 2

மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே - 2

 

மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்

ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் - 2

                     - திரும்பி பார்கிறேன்

 

2.சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்

சோராமல் உம் கரத்தால் அணைத்து கொண்டீரே - 2

சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே - 2

 

நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்

ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் - 2

                     - திரும்பி பார்கிறேன்

Posted by Lyrics Manager on February 18 at 07:38 AM