திரும்பி பார்கிறேன் வந்த பாதையை
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் - 2
நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் - 2
திருப்பி தர ஒன்றும் இல்லையே
1.மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே
மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே - 2
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே - 2
மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் - 2
- திரும்பி பார்கிறேன்
2.சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்
சோராமல் உம் கரத்தால் அணைத்து கொண்டீரே - 2
சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே - 2
நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் - 2
- திரும்பி பார்கிறேன்