Iraivanai nambi irukiren Lyrics PPT இறைவனை நம்பியிருக்கிறேன்

இறைவனை நம்பியிருக்கிறேன்

எதற்கும் பயப்படேன்

இவ்வுலகம் எனக்கெதிராய்

என்ன செய்ய முடியும்

 

பயம் என்னை ஆட்கொண்டால்

பாடுவேன் அதிகமாய்

திருவசனம் தியானம் செய்து

ஜெயமெடுப்பேன் நிச்சயமாய்

 

அச்சம் மேற்கொள்ளாது

இறை அமைதி என்னை காக்கும்

இவ்வுலகம் எனக்கெதிராய்

என்ன செய்ய முடியும்

 

என் சார்பில் இருக்கின்றீர்

என்பதை நான் அறிந்து கொண்டேன்

எதிராக செயல்படுவோர்

திரும்புவார்கள் பின்னிட்டு - அச்சம்

 

சாவினின்று என் உயிரை

மீட்டீரே கிருபையினால்

உம்மோடு நடந்திடுவேன்

உயிர்வாழும் நாட்களெல்லாம்

 

துயரங்களின் எண்ணிக்கையை

கணக்கெடுக்கும் தகப்பன் நீர் -என்

கண்ணீரைத் தோற்பையில்

சேர்த்து வைத்துப் பதில் தருவீர்

 

மறக்கவில்லை என் பொருத்தனைகள்

செலுத்துகிறேன் நன்றி பலி

காலடிகள் இடறாமல்

காத்தீரே நன்றி ஜயா

Posted by Lyrics Manager on April 08 at 01:24 PM