Today Bible Verse

Prayer Quotes in Tamil - Part 2

ஜெபமே ஜெயம்

  • அநேகருடைய ஜெபத்திற்கு சாத்தான் தடங்கலாயிருக்கிறான். உன் ஜெபங்களும், விசுவாசமும் குவிந்து கொண்டே போகையில் நீ பயப்படாதே. ஏனென்றால், நாளைக்குப் பின் அவை வெள்ளப் பெருக்கெடுத்து , பதிலை அடித்துக் கொண்டு வருவதுடன், இன்னும் பல புதிய ஆசீர்வாதங்களையும் சேர்த்துக் கொண்டு வரும். – சர்மான்

 

  • நமது ஜெபத்தின் மூலமாகத்தான் தேவனால் அதிக அளவில் செயலாற்ற முடியும் என்பது கடந்த கால வரலாறு. - A.J. கார்டன்

 

  • பாதாளம் பக்தருக்கு கேடுண்டாக்க தன்னாலானதை செய்கிறது. சிறந்த ஆத்துமாக்கள் வெப்பத்தினாலும், நெருக்கத்தினாலும் சோதித்தறியப் படுகின்றனர். ஆனால், தேவன் அவர்களை ஒருபோதும் கைவிடார். - வாட்கின்ஸன்

 

  • மன்றாட்டு ஜெபம் இரத்தம் சிந்த துணிந்த ஜெபம். அது அக்கினியை இறக்குகிறது. அது ஜீவனை கொடுக்கிறது. அது தேவனையே கொண்டு வருகிறது. – சாமுவேல் சாட்விக்

 

  • நான் என்பது ஜெயிக்கப்பட்டிருந்தால்தான், நாம் தேவனோடு போராட பெலமுள்ளவர்களாகலாம். சண்டை போடுவதால் அல்ல; அவரை சர்ந்திருப்பதாலேயே ஆசீர்வாதம் பெறலாம். -R.மில்லர்

 

  • நமது விசுவாசத்தை சோதிக்க, நமது ஜெபத்தை உயிர்ப்பிக்க, கிறிஸ்து தமது பதிலை தாமதப்படுத்துகிறார். படகு தண்ணீரில் மூழ்கிப் போகையில் தேவன் நித்திரை செய்கிறார். படகு அமிழ்ந்து போகுமுன் நிச்சயம் அவர் விழித்துக் கொள்வார். அவர் தூங்குகிறார். ஆனால், அவர் அவசியத்திற்கதிகமாய் தூங்குவதில்லை. ஏற்ற சமயத்தில் விழித்துக் கொள்வார். - அலெக்சாண்டர் மெக்லரென்

 

  • இயற்கைக்கு உட்பட்டவர்களாகிய நம்மை இயற்கைக்கு மேற்பட்டவர்களாக மாற்றுவதுதான் ஜெபம். – லியோனார்டு ரேவன்ஹில்

 

  • அக்கினி ஒருபோதும் பனிக்கட்டியை உருவாக்க முடியாது; பிசாசு ஒரு போதும் பரிசுத்தவான்களை உருவாக்க முடியாது; அதுபோல, ஜெபிக்காத போதகர்களும் ஒருபோதும் மன்றாட்டு வீரர்களை எழுப்ப முடியாது. - லியோனார்டு ரேவன்ஹில்

 

  • ஜெபம் ஆத்துமாவின் வெளிப்படாத சொல்லப்படாத அந்தரங்க எண்ணம்; இருதயத்தில் அவ்வெண்ணத் தீ மறைந்து கிடந்து நடுங்க வைக்கிறது. - யாரோ ஒரு கவிஞர்

 

  • மன்றாடும் மக்களால் மாத்திரமே பாதாளத்தின் வாசல்களை அசைக்க முடியும். – ஜான் வெஸ்லி

 

  • ஜெபமில்லாத ‘உற்சாகம் வீணானது, தேவனுக்காக மனிதரோடு பேசுவது முக்கியம்; ஆனால், மனிதருக்காக தேவனோடு பேசுவது அதிலும் முக்கியம்.

 

  • ஜெபமின்றி ஜெயமில்லை; கர்த்தரின் படை வீரர்கள் முழங்காலில்தான் நன்றாகப் போரிடுவார்கள்.

 

  • உள்ளறையில் உடைக்கப்பட்டு, உருவாக்கப்படுகிற மனிதன்தான் கல்லறைக்குப் போகும் கணக்கற்ற மக்களை குறித்துக் கவலையும் கரிசனையும் கொள்ளக்கூடிய மனிதனாயிருப்பான். - லியோனார்டு ரேவன்ஹில்

 

  • ஜெபிக்கிறவன் பாவஞ் செய்வதை நிறுத்துவான்; பாவஞ் செய்கிறவன் ஜெபிக்கிறதை நிறுத்துவான்.

 

  • ஆண்டவர் சமுகத்தில் அவசரம் ஆகாது; ஆத்திரமாய் வந்து செல்பவர்கள் மீது தேவன் தமது ஆசீர்வாதங்களை ஊற்றுவதில்லை.

 

  • இரண்டு மணி நேர பிரசங்கத்திற்காக நான் இரண்டு நாட்கள் புசியாமல், தேவ சமுகத்தில் போராடி அழுகையோடு ஜெபிப்பேன். – டி.ஜி.எஸ் தினகரன்

 

  • விளையாடுவதை நிறுத்து விண்ணப்பிக்கத் துவங்கு. உண்டது போதும்  உபவாசிக்கத் துவங்கு. மனிதரிடம் பேசுவதை குறைத்திடு  தேவனோடு பேசுவதை கூட்டிடு. - லியோனார்டு ரேவன் ஹில்

 

  • சுற்றியது போதும் முடங்கி மன்றாடு. மனிதரைக் கேட்பதை குறைத்திடு  தேவ வார்த்தைகளைக் கேட்டிடு. - லியோனார்டு ரேவன் ஹில்

 

  • ஆவிக்குரிய இருளும் குழப்பமும் நிறைந்த இந்த நாட்களில் அனுபவப்பூர்வமான ஆத்தும பாரம் நிறைந்த தேவமனிதர்களே இன்றைய தேவை. – ரோமண்ட் எட்மன்

 

  • சொத்து பொன்னல்ல, பொருட்கள் அல்ல, ஆஸ்தியும் அந்தஸ்தும் அல்ல, மாறாக மறுரூபமாக்கப்பட்ட மனிதர்களே!. – டேவிட் ரேவன்ஹில்

 

  • தீய அலைகளிலிருந்து சபையைக் காப்பாற்றும் தடுப்பு சுவர்களாய் இருப்பது மன்றாட்டு ஜெப வீரர்கள் செய்யும் மன்றாட்டு ஜெபமே. – இ. எம். பவுண்ட்ஸ்

 

  • ஜென்ம சுபாவ மனிதன் வெறுக்கும் முதல் காரியமே ஜெபம். ஆவிக்குரிய மனிதன் விரும்பும் முதல் காரியம் ஜெபமே. - ராபர்ட் மரே மச்செயின்

 

Posted in Prayer Quotes on January 05 at 12:30 PM

Comments (0)

No login
gif