Author

Asattai pannathe avithu vidaathe Lyrics PPT அசட்டை பண்ணாதே அவித்து விடாதே

அசட்டை பண்ணாதே அவித்து விடாதே

ஆவியானவர் உனக்குள்ளே

 

அனல்மூட்டு; எரியவிடு

கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது

காரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ

எழுந்து ஒளிவீசு நித்திய

வெளிச்சம் நீ - அசட்டை

 

ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை

அனுதினம் நீ பேசினால்

வல்லமை வெளிப்படும்

வரங்கள் செயல்படும்

 

அசட்டை பண்ணாதே

அசதியாயிராதே-அசட்டை

 

திருவசனம் நீ தினம் தினம் வாசி

சப்தமாய் அறிக்கையிடு

பெருகிடும் உன் ஊற்று

அது நதியாய் பாய்ந்திடும்

 

வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம்

வேகமாய் வருவார்கள்-உன்

கண்கள் அதைக் காணும்

இதயம் அகமகிழும்-எழுந்து ஒளி

 

நன்றிப்பாடல் ஸ்தோத்திர கீதம்

நாள்தோறும் நீ பாடினால்

கட்டுக்கள் உடைந்திடும்

கதவுகள் திறந்திடும்

 

கேதாரின் ஆடுகள்

நெபாயோத்தின் கடாக்கள்

பலிபீடத்தில் ஏறும்

மகிமையின் தேவாலயம்

மகிமைப்படுத்துவேன்

 

சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த

தேசமாய் மாறிடுவான்

துரிதமாய் செய்திடுவார்

ஏற்றகாலத்திலே - கர்த்தர்

Posted by Lyrics Manager on April 08 at 01:21 PM