Author

Album

Theeya Manathai Matra Song PPT Juvitor |தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே,-கன |

தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே,-கன

நேய ஆவியே

மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால்,-மிக மாயும்

பாவி நான்

தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே,-மருள்

தீர்க்கும், தஞ்சமே

பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான் ஐயா.-ஒரு

பாவி நான் ஐயா

புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே,-அதைப்

புகழ்ந்து காக்கவே

ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி, இரந்து கெஞ்சவே,-தினம்

இதயம் அஞ்சவே

கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே,-அவர்

கிருபை தேடவே

தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே,-மிகு

தெளிவு வேண்டவே

ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊற்றி ஜெபித்துப் போற்றவே,-மிகச்

சிறப்பாய் ஏற்றவே

 

Theeya Manathai Matra Varum 

Posted by Lyrics Manager on April 02 at 10:31 AM