தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே,-கன
நேய ஆவியே
மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால்,-மிக மாயும்
பாவி நான்
தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே,-மருள்
தீர்க்கும், தஞ்சமே
பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான் ஐயா.-ஒரு
பாவி நான் ஐயா
புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே,-அதைப்
புகழ்ந்து காக்கவே
ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி, இரந்து கெஞ்சவே,-தினம்
இதயம் அஞ்சவே
கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே,-அவர்
கிருபை தேடவே
தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே,-மிகு
தெளிவு வேண்டவே
ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊற்றி ஜெபித்துப் போற்றவே,-மிகச்
சிறப்பாய் ஏற்றவே
Theeya Manathai Matra Varum