தீயன் ஆயினேன் ஐயா எளியேன் உற்ற
தீவினை அனைத்தும் தீரும்
தேவரீர் மேலே என் பாரம்
தீயன் ஆயினேன் ஐயா
மாயவலை வீசுவலு பேயின் வினை தீர
நேயமுடனே உறுசகாயனாய் எமக்கென்றிங்கு
நிச்சயித்தெழுந்த எங்கள்
அச்சயா திருக்குமாரா
நன்மை செய்யவே நான் நினைத்தாலும் என்
தன்மை வேறதாய்ப் பின்னம் ஆகுமே
என்ன என்தன் நீதி கந்தை
அன்ன அருவருப்பாமே
எத்தனை ஆனாலும் உன்தன்
சித்தம் வைத்தனுக்கிரகிப்பாய்
பாவம் மீறி என் ஆவி தள்ளாடி நற்
சீவ பாதையைத் தாவி ஓடியே
ஆவலாய் அழி வுறும் துர்ச்
சாவின் வழியே தொடர்ந்து
அக்கிரமச் செய்கைகளில்
சிக்கினேன் ஐயோ உன் தஞ்சம்
தீது செய்பவன் தேவன் முன்னே உத்ர
வாதியாய் உறு நீதம் உண்டென
போதம் உற வேத நெறி
ஓதிய ஏசு நாதா உன்
புண்ணியத்தால் என்னை உய்யப்
பண்ணிடக் கிருபை செய்வாய்