நான் பாவிதான் ஆனாலும்
நீர் இரத்தம் சிந்தினீர்
இன்று உம் பிள்ளை நான்
இயேசையா இன்று உம் பிள்ளை நான்
- கல்வாரியின் மலைமீதிலே
உம் பாடுகள் எனக்காகத் தான் (2)
உம் கை காலிலே காயமெல்லாம்
நான் செய்த பாவமையா (2)
- கன்னங்களில் வழிந்தோடிடும்
கண்ணீரும் எனக்காகத் தான்
உம் கை காலிலே வழிந்தோடிடும்
திரு இரத்தம் எனக்காகத் தான்
- மூன்றாணியால் என் பாவங்கள்
சுமந்து தீர்த்தீரையா
மூன்றாம் நாளில் எனக்காகவே
உயிரோடு எழுந்தீரையா