பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
தேவ ஆவியால் ஆகுமென்றீர்
பரிசுத்த ஆவியே வாரும்
உம் வல்லமை என்மேல் பொழியும்
- பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்
தேவ தாசனுக்கு முன்னால் நீ சமபூமி
இயேசு நாமம் அவன் சொல்லி வருவான்
அதற்கு கிருபை கிருபை என்றார்ப்பரி
- அற்பமான ஆரம்பத்தின் நாளை யார்
அசட்டை பண்ணக் கூடுமோ
பூமியெங்கும் சுற்றிப் பார்க்கும் தேவ கண்கள்
தேவதாசன் கையில் தூக்குநூலை பார்க்கின்றது
- கர்த்தரின் ஆவிதான் நம்மோடு
என்றென்றும் நமக்கு விடுதலை
ஆவியில் நிறைந்து துதி பாடுவோம் - தினம்
ஆர்ப்பரித்து ஆனந்தமாய் உயர்த்திடுவோம்