இயேசப்பா நானும் வருகிறேன்
கலிலேயா கடலோரமாய்
என்னை விட்டுப் போகாதிங்க ராஜா
என்னுள்ளம் தாங்காதுங்க
அன்று ஒலிவமலையில் ஏறி மறுரூபமானிங்க
கடலின் மேலே நடந்து அதிசயம் செய்தீங்க (2)
- எம்மாவூரு சீடரோடு நடந்து சென்றீங்க
என்னோடு இன்று நடந்து வாருங்க
அதுவே என் வாஞ்சை அதுவே என் தாகம்
அதுதான் என் சந்தோஷமே
- மார்த்தாள் அழைத்தபோது கூடப் போனிங்க
மரித்த லாசரை உயிர்த்தெழும்பச் செய்தீங்க
உம்மாலே கூடும் எல்லாமே கூடும்
கூடாதது ஒன்றுமில்லை
- மோசேயோடு கூட நடந்து சென்றீங்க
கடலை பிரிந்து நடக்க உதவி செய்தீங்க
அற்புத தேவன் அதிசய தேவன்
எல்லாம் நீர் செய்திடுவீர்