Author

Marakkapaduvathillai endru Lyrics PPT மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே

மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே

மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2

நீர் செய்த நன்மைகள் ஏராளமே

தினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே

 

கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்

தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்

உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்

சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்

 

தினம் தினம் நன்றி சொல்கிறேன்

நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்

மறக்கப்படுவதில்லை

 

உலகமே எனக்கெதிராய் எழுந்த போது

எனக்காக என் முன்னே நின்றவரே

தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து

எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே

Posted by Lyrics Manager on February 18 at 10:03 AM