Author

En paathiram nirambi Lyrics PPT என் பாத்திரம் நிரம்பி

என் பாத்திரம் நிரம்பி

நிரம்பி வழிகின்றது

வழிந்து ஓடுகின்றது

 

எனக்குள்ளே ஜீவஊற்று

அது வற்றாது ஒரு நாளும் - என் பாத்திரம்

 

அபிஷேகன் நதி நானே

அகிலமெங்கும் பரவிடுவேன்

ஏராளமான மீன்கள்

திரளான உயிரினங்கள்

நதி பாயும் இடமெல்லாம் நான் போகும்

இடமெல்லாம்-எனக்கு

 

ஆனந்த தைலம் நானே

புலம்பலுக்கு எதிரானேன்

துதிஉடை போர்த்திடுவேன்

சாம்பல் நீக்கிடுவேன்

அலங்காரமாக்கிடுவேன் -சபையை

 

கனி கொடுக்கும் மரம் நானே

நாள்தோறும் கனி கொடுப்பேன்

இலைகள் உதிர்வதில்லை

கனிகள் கெடுவதில்லை-என்

விருந்தும் மருந்தும் நானே - சபைக்கு

 

முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்

ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு

காயங்கள் ஆற்றிடுவேன்

கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்

விடுதலை பறைசாற்றுவேன்

 

அயல்மொழிகள் தினம் பேசிடுவேன்

இறைவாக்கு உரைத்திடுவேன்

சாத்தானை துரத்திடுவேன்

கரம் நீட்டி சுகம் கூறுவேன்

அதிசயம் தினம் காண்பேன்

Posted by Lyrics Manager on April 08 at 01:29 PM